மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.


இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் பதிவிடடிருப்பதாவது:
“முன்னதாக இன்று ராஜ்காட்டில் உள்ள பூஜ்ய பாபுவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். நமது நாட்டின் முன்னேற்றம் குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.”