Sun. Apr 13th, 2025

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது:

“இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

இன்று, நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றி இருப்பதை உறுதி செய்த அனைத்து சிறந்த பெண்கள் மற்றும் ஆண்களை நாம் தலைவணங்குகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், வலிமையான, வளமான இந்தியாவை உருவாக்கப் பணியாற்றுவதற்கும், நமது முயற்சிகளை இந்த நிகழ்ச்சி வலுப்படுத்தட்டும்.”


குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta